Saturday, August 22, 2020

ஆசிரியர் தின வாழ்த்து - கவிதை

                                                                                                                                                                                           ஆசிரியர் தின வாழ்த்து - கவிதை


ஆசானே எனது ஆசானே

என் அறிவை வளர்த்த ஆசானே !

அர்ப்பணிப்பே எனது ஆச்சர்யமே 

உலகை அறிய செய்த வழிகாட்டியே !

ஒன்றும் அறியாத என்னையும் 

ஒரு சிறந்த ஆசானாய் மாற்றினாயே !

நல்ல ஒழுக்கத்தை கற்றுத் தந்தாய் !

வரலாற்றை உருவாக்க சொல்லித் தந்தாய் !


கற்றல் தேவையைப் புரிந்து கொண்டு 

நிறைவேற்ற உனை அர்பணிப்பாய் !

உயர் பண்புகள் உருவாக்கவே 

பொறுப்புடனே நீ செயல்படுவாய் !

மாற்றத்திற்கு தேவை உம் வழிகாட்டலே! 

நாட்டை முன்னேற்ற வழி சொல்லுங்களே

கண்ணியமான தொலைநோக்கு கொண்ட 

உம்மையே வணங்கிடுவோம் !

                        

குழந்தையான் என் சிந்தையிலே

நல்ல தாக்கத்தை விதைத்தவனே !

அன்பால் அகிலத்தையே வெல்லும் 

நம்பிக்கை உடையவனே !

தாய்மொழியையும் சுற்றுச்சூழலையும் 

பாதுகாக்க நினைப்பவனே !

ஆசிரியர் சமூகத்தின்  வித்தகரே !

அனைவருக்கும் ஆசிரியர்தின வாழ்த்துகளே !


மா.பெரியசாமி ,
பட்டதாரி ஆசிரியர் (அறிவியல்),
அரசு உயர்நிலைப் பள்ளி,
சின்னம்பள்ளி,
தருமபுரி மாவட்டம்.                   

  மாணவக் கண்மணிகளே! இதோ இயக்க விதி பாடம். பாருங்களே!